வரும் 28ம் தேதி வரை மன்னார் வளைகுடா, குமரிக்கடல், அந்தமான், லட்சத்தீவு, தென் தமிழ்நாடு கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 கிமீ வேகம் வரை வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் அப்பகுதிகளுக்கு மீன்பிடிக்கச் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தி உள்ளது. இதனிடையே தமிழ்நாட்டில் தென்மேற்கு பருவமழை இன்று காலை வரை இயல்பைவிட 122% கூடுதலாக பெய்துள்ளது என்றும் ஜூன் 1-ம் தேதி முதல் இன்று காலை வரை வழக்கமாக 43.8 மி.மீ. மழை பதிவாகும் நிலையில் 97.4 மி.மீ. மழை பெய்துள்ளது என்றும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.