பாஜக கூட்டணியில் இணைந்து ராமநாதபுரத்தில் பலாப்பழ சின்னத்தில் ஓபிஎஸ் போட்டியிட்டதில் எனக்கு துளி அளவுகூட விருப்பமில்லை. அவரது செயல்பாடுகளை அறிந்து அவரை விட்டு நான் பிரிந்து 3 மாதங்களாகிறது. இனிமேல் ஓபிஎஸ்சால் எதுவும் செய்ய முடியாது. அவரால் எந்த பிரயோஜனமும் இல்லை. அதிமுக பணக்காரர்களால் உருவான கட்சியல்ல. ஏழை, எளியவர்களால் எழுச்சி பெற்ற இயக்கம். சசிகலா 2 ஆண்டுகளாக அறிக்கை விட்டு கொண்டிருப்பதை தவிர அதிமுக இணைப்பு முயற்சிக்கு வேறு என்ன நடவடிக்கை எடுத்தார். டிடிவி. தினகரன் தனிக்கட்சி துவங்கி சென்று விட்டார். அவர் எப்படி அதிமுகவை ஒன்றிணைப்பது குறித்து பேச முடியும். இவ்வாறு கு.ப.கிருஷ்ணன் கூறினார்.