ஓபிஎஸ் கவலை வைத்திலிங்கம் மீது வழக்கு போடுவதா?

சென்னை: முன்னாள் முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கை: ஒன்றுபட்ட அதிமுக என்ற முயற்சியில் முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி ஈடுபட்டுள்ளார் என்றும், அதிமுக விரைவில் ஒன்றிணையும் என்றும் வைத்திலிங்கம் கூறியதாக செய்திகள் வெளியாகி இருந்தன. இந்த நிலையில் வைத்திலிங்கம், எஸ்.பி. வேலுமணியின் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

இதற்கு எனது கடும் கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிமுகவை ஒன்றிணையவிடாமல் தடுத்து அதன்மூலம் 2026ம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றுவிடலாம் என சிலர் நினைக்கிறார்கள். அந்த கனவு நிச்சயம் பலிக்காது. அதிமுக ஒன்றுபடும், வீறுகொண்டு எழும். இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளார்.

Related posts

மயிலாப்பூர் நிதி நிறுவனத்தில் ரூ.525 கோடி மோசடி தேவநாதன் மீது 4,100 புகார்கள் குவிந்தன: 4 சொகுசு கார்கள், ரூ.1 கோடி மதிப்பிலான பத்திர ஆவணங்கள் பறிமுதல்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்டவர்கள் நீக்கப்பட்டவர்கள்தான்: எடப்பாடி பழனிசாமி ஆவேசம்

கிண்டி ரேஸ் கிளப் மைதானத்தில் 118 ஏக்கரில் பசுமைவெளி சுற்றுச்சூழல் பூங்கா: தமிழக அரசாணை வௌியீடு