4 ஒபிஎஸ்களுடன் ஓபிஎஸ் போட்டி: ரூம் போட்டு டீம் ஒர்க்

ராமநாதபுரம் மக்களவை தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் நவாஸ்கனி, முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், அதிமுக வேட்பாளர் ஜெயபெருமாள் ஆகியோர் நேற்று முன்தினம் வேட்புமனு தாக்கல் செய்தனர். மேலும் சுயேட்சையாக மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகா மேக்கிழார்பட்டியைச் சேர்ந்த ஒச்சப்பன் மகன் ஓ.பன்னீர்செல்வம் வேட்பு மனு தாக்கல் செய்து பரபரப்பை ஏற்படுத்தினார். தொடர்ந்து, நேற்று ராமநாதபுரம் அருகே வாலாந்தரவை தெற்கு காட்டூர் ஒய்யாரதேவர் மகன் ஓ.பன்னீர்செல்வம், மதுரை மாவட்டம், திருமங்கலம் தாலுகா, வாகைக்குளம் ஒச்சாத்தேவர் மகன் ஓ.பன்னீர்செல்வம், மதுரை சோலை அழகுபுரம் ஒய்யாரன் தேவர் மகன் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பெயரில் வேண்டுமென்றே குழப்பம் ஏற்படுத்துவற்காகவே ஓ.பன்னீர்செல்வம் பெயர் கொண்ட 4 பேரை வேட்பாளர்களாக அதிமுக தரப்பு களமிறக்கி உள்ளதாக ஓபிஎஸ் ஆதரவாளர்கள் தெரிவித்தனர். இதனால் ராமநாதபுரம் தொகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது மனு தாக்கல் செய்து உள்ள 4 பேர்ரும் ஒ.பன்னீர்செல்வம்தான். மாஜி முதல்வர் மட்டும்தான் ஓ.பன்னீர்செல்வம். இது பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளதால் வாக்குகள் சிதற வாய்ப்பு உள்ளது.

Related posts

அமீர் உள்பட 12 பேர் மீது குற்றப்பத்திரிகை; ஜாபர் சாதிக் வழக்கில் திடீர் திருப்பம்: அமலாக்கத்துறை அதிரடி

ராமன்பிள்ளை தெருவில் பள்ளங்கள் சீரமைக்கப்படுமா?

திருவள்ளுவர் பிறந்தநாள் குறித்து எந்த ஆதாரமும் இல்லாமல் அரசுக்கு உத்தரவிட முடியாது: ஐகோர்ட் திட்டவட்டம்!!