அந்த தேர்தல் குழு கூட்டத்தில் சத்தீஸ்கர் மாநிலம், ராஜஸ்தான் தேர்தலுக்கான வேட்பாளர்கள் தேர்வு, 2 மாநிலத்தில் தேர்தலின்போது பாஜ செய்ய வேண்டிய நிகழ்ச்சிகள், திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. ப.சிதம்பரம் 33 சதவீத சட்ட மசோதா அமலுக்கு வராது என்கிறார். காங்கிரஸ் ஆட்சி இருந்த மனநிலையிலே இருந்து பேசி வருகிறார். சட்ட மசோதா கொண்டு வந்து இருப்பவர் தற்போதைய பாரத பிரதமர் மோடி. எதை சொல்கிறாரோ அதை செய்யக்கூடியவர். பெண்களுக்கான உரிமை கண்டிப்பாக அமல்படுத்தப்படும். ஓபிஎஸ் பாஜவில் இணைவது பற்றி எனக்கு தெரியவில்லை. இவ்வாறு வானதி சீனிவாசன் கூறினார்.