முன்னாள் அமைச்சர்களின் ஊழல் வழக்கு விசாரணை நீதிமன்றம் தான் முடிவு செய்ய வேண்டும். இதனை கால தாமதப்படுத்தும் விதமாக ஆளுநர் அதற்கான ஒப்புதலை கிடப்பில் போட்டிருந்தது தவறு. இதுபோல ஆளுநர் தாமதப்படுத்தினால் ஊழல் வழக்குகள் பெருகும் நிலை ஏற்படும். பலரை பாதுகாக்கும் விதமாக ஆளுநர் செயல்படுவது தவறு. எடப்பாடி பழனிச்சாமி, முதலில் வன்னியர்களை ஏமாற்றினார். அதன் பின்னர் ஒவ்வொருவராக ஏமாற்றி வருகிறார். அதேபோல தான் தற்போது சிறுபான்மையினர் மீது அக்கறை இருப்பது போல் நடித்து அவர்களை ஏமாற்றி வருகிறார். சிறுபான்மையினர் வாக்குகள் அதிமுகவுக்கு இனி ஒருபோதும் வராது. அறநிலையத்துறை இருக்கக் கூடாது என்று கூறுவது சரியான முடிவு அல்ல. இவ்வாறு அவர் கூறினார்.