டெல்லி: 2019ம் ஆண்டு நடந்த மக்களவை தேர்தலில் தேனி தொகுதியில் ஓ.பி.ரவீந்திரநாத் பெற்ற வெற்றி செல்லாது என்ற சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, ஓ.பி.ரவீந்திரநாத் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்துள்ளார். ரவீந்திரநாத் வேட்புமனுவில் உண்மை விவரங்கள் மற்றும் வருமானத்தை மறைத்துள்ளார். எனவே அவரது வேட்புமனு ஏற்கப்பட்டது சட்டவிரோதம், எனவே அவரது வெற்றியை ரத்து செய்ய வேண்டும் என்று தொடரப்பட்ட வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், ஓ.பி.ரவீந்திரநாத் வெற்றி செல்லாது என தீர்ப்பளித்தது.