டெல்லி: எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும் என கோரும் பாஜகவிடம் இருந்து ஒத்துழைப்பு இல்லை என ஜேஎம்எம் கட்சி விமர்சித்துள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு துணை சபாநாயகர் பதவியை தர பாஜக முன்வந்திருந்தால், சபாநாயகருக்கு தேர்தல் நடந்திருக்காது. 8-வது முறையாக எம்பியாக உள்ள கொடிக்குன்னில் சுரேஷ் பெயரை எதிர்க்கட்சிகள் சபாநாயகர் பதவிக்கு முன்மொழிந்தன. மக்களவை சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடந்தது பற்றி ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உறுப்பினர் மஹுவா மாஜி கருத்து தெரிவித்துள்ளார்.