மணிப்பூர்: மணிப்பூர் சென்றுள்ள I.N.D.I.A. கூட்டணி கட்சி எம்.பி.க்கள் அம்மாநில ஆளுநர் அனுசுயாவுடன் சந்தித்துள்ளனர். முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களை எம்.பி.க்கள் நேற்று சந்தித்த நிலையில் ஆளுநருடன் சந்தித்துள்ளனர். வன்முறையைல் ஏற்பட்ட பாதிப்புகளை ஆய்வு செய்ய எதிர்க்கட்சிகள் குழு 2 நாள் பயணமாக மணிப்பூர் சென்றுள்ளது. காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங், விட 20 காட்சிகளை சேர்ந்த எம்.பி.க்கள் மணிப்பூர் சென்றுள்ளனர். மணிப்பூரில் விரைவில் அமைதியை நிலை நாட்ட வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேட்டி அளித்துள்ளார்.