டெல்லி: எதிர்க்கட்சிகளின் ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் டெல்லியில் உள்ள சரத் பவார் இல்லத்தில் தொடங்கியது. நாடாளுமன்ற தேர்தல், 5 மாநில சட்டப்பேரவை தேர்தல் உள்ளிட்டவை தொடர்பாக எதிர்க்கட்சிகள் ஆலோசனை மேற்கொண்டுள்ளனர். சரத் பவார், கே.சி.வேணுகோபால், டி.ஆர்.பாலு உள்ளிட்ட 14 உறுப்பினர்கள் கொண்ட ஒருங்கிணைப்புக்குழு ஆலோசனை மேற்கொண்டுள்ளது.