எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் வரும் ஜூலை 13, 14 தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிப்பு

டெல்லி: 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வலுவான எதிர் அணியை கட்டமைப்பது குறித்து பாட்னாவில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இந்தியாவில் அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 10 மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் அதற்கான நடவடிக்கைகளை தொடங்கியயுள்ளன. கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாட்னாவில் நிதிஷ் குமார் தலைமையில் எதிர்க்கட்சி தலைவர்கள் ஆலோசனை நடத்தினர். அதில் பாஜகவை எதிர்த்து தேர்தலில் இணைந்து போட்டியிடுவது என முடிவு செய்தனர்.

இந்நிலையில் இன்று 2024 நாடாளுமன்ற தேர்தலில் பாஜகவை வீழ்த்த வலுவான எதிர் அணியை கட்டமைப்பது குறித்து பாட்னாவில் முதல்வர் நிதிஷ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. அதன்பிறகு எதிர்க்கட்சிகளின் அடுத்த ஆலோசனைக் கூட்டம் பெங்களூருவில் வரும் ஜூலை 13, 14 தேதிகளில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சிம்லாவில் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பெங்களூருவில் நடைபெற உள்ளது. சிம்லாவில் மழை பெய்துவருவதால் பெங்களூருவில் கூட்டத்தை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி தலைவர் சரத்பவார் தெரிவித்துள்ளார்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை