எதிர்க்கட்சிகளை பாஜக எதுவும் செய்ய முடியாது: மஹுவா மொய்த்ரா

டெல்லி: பாஜக மைனாரிட்டி அரசு ஆகிவிட்டது என்பதை அந்தக் கட்சியினர் இன்னும் உணரவில்லை என திரிணாமுல் காங். எம்.பி. மஹுவா மொய்த்ரா தெரிவித்துள்ளார். 2019-ல் நாடாளுமன்ற உறுப்பினராக முதன்முதலில் பேசியபோது சர்வாதிகாரத்தின் ஏழு குறியீடுகள் என்பதைப் பற்றி பேசினேன். பெண்களைக் கண்டு பாஜக அச்சப்படுகிறது; அதனால்தான் மகளிர் இடஒதுக்கீட்டை நீங்கள் அமல்படுத்தவில்லை. தேர்தல் ஆணையத்தை மீறி எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றுள்ளன. ஆளும் கட்சியினரின் 3 அத்துமீறல்களை தேர்தல் ஆணையம் கண்டுகொள்ளவில்லை. கடவுள்களிடம் ஆணவத்துடன் நடந்து கொண்டால் தண்டிக்கப்படுவீர்கள் என்பதை பாஜகவுக்கு சொல்லிக் கொள்கிறேன். மன்னர் ஆட்சியின் அடையாளம்தான் செங்கோல். நீங்கள் மைனாரிட்டி ‘ ஆகிவிட்டீர்கள் என்பதை இன்னும் உணரவில்லை. நெருப்பாற்றில் நீந்தி வந்த எங்களை நீங்கள் எதுவும் செய்ய முடியாது.

Related posts

போலீசார், தொழிலதிபர் என 20 பேரை ஏமாற்றி திருமணம்: கல்யாண ராணி சிக்கினார்

துப்பாக்கி முனையில் பைனான்ஸ் அதிபரிடம் 95 சவரன் நகை பறிப்பு

ரூ.822 கோடி குத்தகை பாக்கி ஊட்டி குதிரை பந்தய மைதானத்திற்கு சீல்