டெல்லி: நாடாளுமன்றத்தில் அவசர நிலை பற்றி விமர்சித்து ஓம் பிர்லா தீர்மானம் கொண்டு வந்து நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நேரில் சந்தித்து எதிர்ப்பை தெரிவித்தார். ராகுல் காந்தியுடன் எம்.பி.க்கள் கனிமொழி, சுப்ரியா சுலே, டிம்பிள் யாதவ், பிரேமச்சந்திரன் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.