பாட்னா: எதிர்க்கட்சிகள் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க ராகுல்காந்தி பாட்னா வந்தடைந்தார். விமான நிலையத்தில் பீகார் முதல்வர் நிதிஷ்குமார் ராகுல் காந்தியை வரவேற்றார். பீகார் மாநிலம் பாட்னாவில் நிதீஷ்குமார் தலைமையில் இன்று காலை 11 மணிக்கு எதிர்கட்சிகள் கூட்டம் நடைபெறவுள்ளது.