நிறை புத்தரிசி பூஜைகளுக்காக சபரிமலையில் நாளை நடை திறப்பு

திருவனந்தபுரம்: நிறைபுத்தரிசி பூஜைகளுக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை நாளை (11ம் தேதி) திறக்கப்படுகிறது. சபரிமலையில் வருடம்தோறும் ஆடி மாதத்தில் நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். நாட்டில் விவசாயம் செழித்து வறுமை நீங்குவதற்காக இந்த பூஜை நடத்தப்படுகிறது. அதன்படி இந்த வருடத்துக்கான நிறைபுத்தரிசி பூஜை வரும் 12ம் தேதி நடைபெறுகிறது. இதை முன்னிட்டு நாளை மாலை 5 மணிக்கு சபரிமலை கோயில் நடை திறக்கப்படுகிறது. கோயில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி நடை திறப்பார்.

12ம் தேதி அதிகாலை 5.45க்கும் 6.30 மணிக்கும் இடையே நிறைபுத்தரிசி பூஜை நடைபெறும். இதற்காக பாலக்காடு மற்றும் அச்சன்கோவில் ஆகிய இடங்களில் இருந்து புதிதாக அறுக்கப்பட்ட நெற்கதிர்கள் கொண்டு வரப்படும். இந்த நெற்கதிர்கள் பூஜை செய்யப்பட்ட பின்னர் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படும். தொடர்ந்து வழக்கமான பூஜைகளுக்குப் பின்னர் 12ம் தேதி இரவு 10 மணிக்கு கோயில் நடை சாத்தப்படும். மீண்டும் ஆவணி மாத பூஜைகளுக்காக வரும் 16ம் தேதி மாலை சபரிமலை கோயில் நடை திறக்கப்படும்.

 

Related posts

ஹெலிகாப்டர் சகோதரர்களான பாஜ பிரமுகர்களின் சொத்தை வழக்கில் இணைக்க வேண்டும்: ஐகோர்ட் கிளை உத்தரவு

தொடர்ந்து 5 மணி நேரம் பட்டாசு ஆலை வெடித்ததால் 50 வீடு சேதம்

கன்னட நடிகர் ராஜ்குமார் கடத்தல் வழக்கு; வீரப்பன் கூட்டாளி தலைமறைவு குற்றவாளி: ஈரோடு கோர்ட் அறிவிப்பு