ஊட்டியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்கள்: சுற்றுலா பயணிகள் கண்டு ரசிப்பு

ஊட்டி: ஊட்டியில் பூத்துக்குலுங்கும் குறிஞ்சி மலர்களை சுற்றுலா பயணிகள், பொதுமக்கள் கண்டு ரசித்து செல்கின்றனர். நீலகிரி மாவட்டத்தில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் `ஸ்டபிலான்தஸ் குந்தியானஸ்’ என்ற வகை குறிஞ்சி மலர்கள், ஆண்டுக்கு ஒருமுறை பூக்கும் `ஸ்டபிலான்தஸ் மினியேச்சர்’ வகை குறிஞ்சி மலர்கள் உள்ளன. தற்போது மாவட்டத்தில் ஊட்டி அடுத்த கெங்கமுடி அருகே பிக்கப்பதிமந்து பகுதியில் மலைச்சரிவில் பல இடங்களில் 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பூக்கும் ‘ஸ்டபிலான்தஸ் குந்தியானஸ்’ என்ற குறிஞ்சி மலர்கள் அதிகளவு பூத்து குலுங்குகின்றன.

இவற்றை அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பார்வையிட்டு மகிழ்கின்றனர். இதுதவிர ஊட்டி சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள், அவ்வழியாக செல்லும் சுற்றுலா பயணிகளும் கண்டு ரசித்து செல்வதோடு அதன் அருகே நின்று புகைப்படம் எடுத்து மகிழ்கின்றனர்.

Related posts

நிதி நிறுவன மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட தேவநாதனுக்கு மீண்டும் போலீஸ் காவல்!

குரூப் 4 காலி பணியிடங்கள் அதிகரிப்பு; அடுத்த மாதம் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என டிஎன்பிஎஸ்சி தகவல்

மதுரை வண்டியூர் அருகே பிளாஸ்டிக் குடோனில் பயங்கர தீ: ரூ.30 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்