ஊட்டி: கர்நாடக மாநில அரசு பஸ்கள் மூலம் நீலகிரி மாவட்டத்திற்கு அதிகளவிலான தடை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பாட்டில்கள் கொண்டு வரப்படுவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தொடர்ச்சியாக புகார் வந்தது. இதைதொடர்ந்து நேற்று முன்தினம் இரவு ஊட்டி மத்திய பஸ் நிலையத்திற்கு வந்த கர்நாடகா மாநில அரசு சொகுசு பஸ்சில் ஊட்டி வருவாய்த்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அப்போது அந்த பஸ்சில் தடை செய்யப்பட்ட ஒரு லிட்டர் பாட்டில்கள் அதிகளவு இருந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அவற்றை பறிமுதல் செய்து ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தனர்.