குறிப்பாக, ஊட்டியில் பூக்கும் காட்டு சூரியகாந்தி,டேலியா,எவர்லாஸ்ட்,சீகை மர பூக்கள்,கோத்தகிரி மிலார் செடிகளில் பூக்கும் மஞ்சள் நிற மலர்கள் அனைத்தும் சுற்றுலா பயணிகளை வெகுவாக கவர்ந்து வருகிறது.இந்த மலர்கள் ஒரே சமயத்தில் பூக்காது.வேறுபட்ட காலத்தில்,காலநிலைக்கேற்ப பூக்கும்.தற்போது நீலகிரி மாவட்டத்தில் பெரும்பாலான பகுதிகளில் மஞ்சள் நிற எவர்லாஸ்ட் மலர்கள் பூத்துள்ளன.
குறிப்பாக,ஊட்டியில் இருந்து மஞ்சூர் செல்லும் சாலை, ஊட்டி – எப்பநாடு சாலை, காத்தாடிமட்டம், ஆறாவது மைல் பகுதிகளில் இந்த மலர்கள் அதிகளவு பூத்துள்ளது.இவ்வழித்தடத்தில் செல்லும் சுற்றுலா பயணிகள் மற்றும் உள்ளூர் மக்கள் இந்த மலர்களை கண்டு ரசித்து செல்வதுடன், அதன் நடுவே நின்று புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர்.