நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர் சுற்றுவட்டார பகுதிகளில் ஸ்ட்ராபெரி பழ சாகுபடி செய்யப்படுகிறது. ஸ்ட்ராபெரி சாகுபடிக்கு, லேசான மழை மற்றும் குளிர் ஏற்றதாக இருப்பதால், தற்போது விவசாயிகள் அதிகளவில் ஸ்டிராபெரி பயிரிடுகின்றனர். இந்நிலையில் ஊட்டி சுற்று வட்டார பகுதிகளில் கடந்த அக்டோபர் மாத துவக்கத்தில் இருந்து ஸ்ட்ராபெரி பழ நாற்றுகளை விவசாயிகள் பயிரிட்டனர்.
அவ்வப்போது பெய்த மழை காரணமாக இப்பயிர்கள் நன்கு வளர்ந்துள்ள சூழலில் காய்க்கத் துவங்கி உள்ளன. இதனால் இவற்றை பராமரிக்கும் பணிகளில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘‘ஸ்டிராபெரி பழத்துக்கு, கர்நாடகா மற்றும் வெளிநாடுகளில், கிராக்கி உள்ளது. இதுதவிர ஊட்டி வர கூடிய சுற்றுலா பயணிகளும் வாங்கி செல்கின்றனர். தற்போது ஒரு கிலோ ஸ்ட்ராபெரிக்கு 200 முதல் 400 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. அக்டோபர் நடவு செய்யப்பட்ட ஸ்ட்ராபெர்ரி செடிகள் தற்போது காய்க்க துவங்கி உள்ளன’’ என்றனர்.