மேலும், சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில், சடலமாக கிடந்தவர் திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நாகூர் மீரான் (39) என்பதும், அவர், எழும்பூரில் இருந்து கன்னியாகுமரி சென்ற எக்ஸ்பிரஸ் ரயிலில் பொது பெட்டியில் படிக்கட்டில் பயணம் செய்ததும், ஊரப்பாக்கம் அருகே சென்றபோது அவர் ரயிலில் இருந்து தவறி கீழே விழுந்ததில், பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.