ஆன்லைனில் ஆர்டர் செய்த பொடி தோசையில் பூரான்: சாப்பிட்ட வாலிபர் மயக்கம்

மன்னார்குடி: திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி ஆர்பி சிவம் நகரை சேர்ந்தவர் பிரவீன்குமார்(23). வடசேரி சாலையில் உள்ள தனியார் பள்ளி அருகே புத்தக கடை வைத்துள்ளார். நேற்று காலை கடையை திறந்ததும் ஆன்லைனில் பிரபல உணவு நிறுவனத்தின் ஆப் மூலம் பொடி தோசை ஆர்டர் செய்தார். சிறிது நேரத்தில் அந்த நிறுவன ஊழியர் மூலம் மன்னார்குடியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் இருந்து பொடி தோசை வந்தது. இதை பிரவீன்குமார் சாப்பிட்டுக்கொண்டிருந்த போது, தொண்டையில் எரிச்சல் ஏற்பட்டது. அப்போது பொடி தோசையில் பாதி அளவில் பூரான் ஒன்று இறந்து கிடந்தது தெரியவந்தது. பாதி பூரானை அவர் சாப்பிட்டிருக்கலாம்.

பின்னர் பிரவீன் குமாருக்கு வாந்தி ஏற்பட்டது. சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். அப்போது கடைக்கு வந்தவர்கள் பிரவீன்குமாரை சிகிச்சைக்காக மன்னார்குடி அரசு தலைமை மருத்துவமனையில் சேர்த்தனர். தகவல் அறிந்ததும் உணவு பாதுகாப்பு அலுவலர் அழகுவேல் சம்பந்தப்பட்ட உணவகத்துக்கு சென்று ஆய்வு செய்ததோடு உணவு பொருட்களின் மாதிரிகளை சேகரித்து எடுத்து சென்றனர். பொடி தோசையில் பூரான் இறந்து கிடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related posts

சிவகங்கையில் ஐம்பொன் சிலை திருடிய பெண் கைது..!!

பெலிக்ஸ் ஜெரால்டு வழக்கு விவகாரம்: ஐகோர்ட் உத்தரவுக்கு சுப்ரீம்கோர்ட் தடை

கார்கேவை சந்தித்துவிட்டு காங்கிரஸில் இணைந்த இந்திய மல்யுத்த வீரர்கள் வினேஷ் போகத், பஜ்ரங் புனியா!!