தகவலறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற விஷ்ணுகாஞ்சி போலீசார், அன்புவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக காஞ்சிபுரம் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். வறுமை நிலையிலும் தொடர்ந்து நெசவுத்தொழிலை செய்துவந்த நெசவாளர் ஆன்லைன் சூதாட்டத்துக்கு அடிமையான நெசவாளர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் காஞ்சிபுரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனவே, ஆன்லைன் சூதாட்டத்தை தடை செய்ய அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் பலர் வலியுறுத்தினர். இதனிடையே, கடந்த ஜூன் மாதம் 24ம் தேதி தனியார் நிதி நிறுவனங்கள் தொல்லையால் வீடியே பதிவு செய்து கீழ்கதீர்பூர் பகுதியை சேர்ந்த மணி என்பவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.