ஆன்லைன் ரம்மி விசைத்தறி அதிபர் தற்கொலை

இடைப்பாடி: இடைப்பாடி அடுத்த சின்னமணலி பகுதியைச் சேர்ந்தவர் அங்கமுத்து(42). விசைத்தறி அதிபர்.அங்கமுத்து கடந்த 6 மாதங்களுக்கு முன்பு, ஆன்லைன் ரம்மி விளையாடியதில் ரூ.1.50 லட்சத்தை இழந்துள்ளார். இதையடுத்து, அவரது மனைவி ராஜலட்சுமி, தனது தாலியை விற்று கணவனின் கடனை அடைத்து உள்ளார். அதன் பின்னரும் அங்கமுத்து விட்ட பணத்தை மீட்க, தொடர்ந்து ரம்மி ஆடியுள்ளார். இதில் ஏராளமான பணத்தை இழந்துள்ளார். இதனால் சோகத்தில் இருந்த அங்கமுத்து, நேற்று முன்தினம், வீட்டில் சாணி பவுடரை குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

Related posts

விக்கிரவாண்டி தொகுதி அடங்கிய விழுப்புரம் மாவட்டத்தில் திமுக ஆட்சியில் ஏராளமான திட்டங்கள்: தமிழ்நாடு அரசு பெருமிதம்: 16,128 பேருக்கு ரூ.24.43 கோடி சுய உதவிக்குழு கடன் ரத்து

தமிழ்நாட்டில் 5 நாட்கள் மிதமான மழை பெய்யும்

சட்டம்-ஒழுங்கை பராமரிப்பதே முதல் பணி ரவுடிகளுக்கு அவர்கள் மொழியில் சொல்லிக்கொடுப்போம்: புதிதாக பொறுப்பேற்ற சென்னை போலீஸ் கமிஷனர் அருண் எச்சரிக்கை