சென்னை: ஆன்லைனில் வழக்கறிஞர் சேவையை விளம்பரப்படுத்தும் நிறுவனங்கள், வழக்கறிஞர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க இந்திய பார் கவுன்சிலுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மக்களின் அன்றாட சேவை வழங்கும் ஆன்லைன் நிறுவனங்கள் சட்ட சேவை வழங்க தடை கோரிய வழக்கில் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. ஆன்லைனில் வழக்கறிஞர் சேவை வழங்குவது தொடர்பாக விளம்பரங்கள் வெளியிடுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். வழக்கறிஞர்கள் மீது நடவடிக்கை என மாநில பார் கவுன்சில்களுக்கு இந்திய பார் கவுன்சில் சுற்றறிக்கை பிறப்பிக்க உத்தரவிட்டுள்ளது.