புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாத்தூர் ராமசாமிபுரத்தில் தேர் சாய்ந்து ஒருவர் உயிரிழப்பு


புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அருகே மாத்தூர் ராமசாமிபுரத்தில் தேர் சாய்ந்து ஒருவர் உயிரிழந்தார். முத்துமாரியம்மன் கோயில் தேரோட்டத்துக்கு ஏற்பாடு நடந்தபோது நேரிட்ட விபத்தில் 4 பேர் காயம் அடைந்துள்ளனர். மகாலிங்கம் (60) என்பவர் உயிரிழந்த நிலையில் காயமடைந்த 4 பேர் பேராவூரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தேரின் மீது கும்பம் ஏற்றிக் கொண்டிருந்தபோது கயிறு அறுந்து தேர் சாய்ந்து விபத்து நேரிட்டுள்ளது.

Related posts

உத்தரப்பிரதேசத்தில் ஆன்மிக நிகழ்வின் கூட்ட நெரிசலில் சிக்கி 122 உயிரிழப்பு: தலைவர்கள் இரங்கல்

அமாவாசை மற்றும் வார இறுதி நாட்களை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கம்

பவானிசாகர் அணை நீர்மட்டம் 66 அடியாக உயர்வு