மழை பாதித்த பகுதிகளில் இருந்து 18 ஆயிரம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டுள்ளனர். பல இடங்களில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், மாநில பேரிடர் மீட்பு படையினர் மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். நேற்று ஒரே நாளில் 19 பேர் பலியாகிவிட்டனர். இதனால் 2 நாள் மழைக்கு பலியானவர்கள் எண்ணிக்கை 26ஆக உயர்ந்து விட்டது. பஸ்,ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. குஜராத்தில் இருந்து மும்பை செல்லும் வந்தே பாரத் ரயில் உள்பட 8 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனிடையே மழை நிலைமை குறித்து மாநில முதல்வர் பூபேந்திர படேலுடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேசினார். அப்போது மாநிலத்துக்கு தேவையான உதவிகள் அளிக்கப்படும் என உறுதி அளித்துள்ளார்.