இந்த சம்பவம் தொடர்பாக பாண்டிபஜார் போக்குவரத்து பிரிவு காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து அஜய்குமாரை கைது செய்தனர். இந்த வழக்கு சென்னை மாவட்ட 5வது கூடுதல் அமர்வு நீதிமன்ற நீதிபதி முருகானந்தம் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர் எஸ்.பகவதிராஜ் ஆஜரானார். விசாரணையின்போது சம்பவம் நடந்த இடத்தின் அருகே ஓட்டல் வைத்திருக்கும் நபர், கார் மோதியதில் பாதிப்பு ஏற்பட்ட கார் உரிமையாளர் உள்ளிட்டோர் ேநரில் ஆஜராகி சாட்சியம் அளித்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, குடிபோதையில் வாகனம் ஓட்டி விபத்து ஏற்படுத்தியது சாட்சிகள் மூலம் நிரூபிக்கப்பட்டதால் அஜய்குமாருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும், 13 ஆயிரம் ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது என்று தீர்ப்பளித்தார்.