விருதுநகர்: வெம்பக்கோட்டை அருகே விஜயரங்காபுரத்தில் பட்டாசு ஆலை விபத்தில் ஒருவர் படுகாயம் அடைந்தார். ரசாயன கலவை மருந்து கலக்கும் பணியில் ஈடுபட்டு வரும் ஜெயக்குமார் பணி முடிந்து பீடி பற்றவைத்தபோது தீ விபத்து ஏற்பட்டது. தீ விபத்தில் துரைசாமிபுரத்தை சேர்ந்த ஜெயக்குமாருக்கு பலத்த தீக்காயம்; வெம்பக்கோட்டை போலீஸ் விசாரணை நடத்தி வருகின்றனர்.