கார்டூம்: சூடானில் ராணுவம், துணை ராணுவம் இடையே ஏற்பட்டுள்ள மோதலில் இந்தியர் ஒருவர் உயிரிழந்தார். இந்தியாவைச் சேர்ந்த ஆல்பர்ட் அகஸ்டின் என்பவர் துப்பாக்கிக் குண்டு பாய்ந்து உயிரிழந்ததாக இந்திய தூதரகம் தகவல் தெரிவித்துள்ளது. உயிரிழந்த ஆல்பர்ட் அகஸ்டின் குடும்பத்தினருடன் தூதரக அதிகாரிகள் தொடர்பில் உள்ளதாக இந்திய தூதரகம் அறிவித்துள்ளது. ஆயுதப்படைகள் இடையே நடந்த கடும் துப்பாக்கிச் சண்டையில் 56 பேர் உயிரிழந்துள்ள நிலையில் 595 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். ஆயுதப்படைகள் மோதல் காரணமாக சூடானில் பதற்றம் நிலவுவதால் இந்தியர்கள் பாதுகாப்பாக இருக்க தூதரகம் அறிவுறுத்தியுள்ளது.