நாகர்கோவில்: ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலை நடத்த முடியாத நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடக்காது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கை தொடர்பாக நாகர்கோவிலில் ஆய்வு நடத்திய பின் கனிமொழி எம்.பி. பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்; ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மாநிலங்களின் அடையாளத்தை அழிப்பதாகத்தான் பார்க்க முடியும். வளர்ச்சிக்கான தேர்தல் அறிக்கையை மக்கள் எதிர்பார்க்கும் நிலையில் பாஜக மத அரசியலை செய்கிறது என்று அவர் கூறினார்.