ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடக்காது: கனிமொழி எம்.பி. பேட்டி

நாகர்கோவில்: ஒரே கட்டமாக மக்களவைத் தேர்தலை நடத்த முடியாத நிலையில் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது நடக்காது என்று கனிமொழி எம்.பி. தெரிவித்துள்ளார். திமுக தேர்தல் அறிக்கை தொடர்பாக நாகர்கோவிலில் ஆய்வு நடத்திய பின் கனிமொழி எம்.பி. பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர்;  ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது மாநிலங்களின் அடையாளத்தை அழிப்பதாகத்தான் பார்க்க முடியும். வளர்ச்சிக்கான தேர்தல் அறிக்கையை மக்கள் எதிர்பார்க்கும் நிலையில் பாஜக மத அரசியலை செய்கிறது என்று அவர் கூறினார்.

 

Related posts

பாலராமர் கோயில் அமைந்துள்ள அயோத்தியில் முஸ்லிம்கள் கடைகள் நடத்த ஒன்றிய அமைச்சர் கிரிராஜ் சிங் எதிர்ப்பு

நாமக்கல்லில் முட்டை கொள்முதல் விலை 5 காசுகள் உயர்ந்து ரூ.5.20-க்கு விற்பனை

திரிணாமுல் காங்கிரஸ் எம்.பி. மஹுவா மொய்த்ரா மீது டெல்லி சைபர் கிரைம் போலீசார் வழக்கு பதிவு