மாணவர் பெருமன்றம் சார்பில்; நீட் எதிர்ப்பு போராட்டம்

பெரம்பூர்: சென்னை பெரம்பூர் தொகுதிக்கு உட்பட்ட வியாசர்பாடி அம்பேத்கர் கல்லூரி எதிரே அனைத்திந்திய மாணவர் பெருமன்றம் வடசென்னை மாவட்டம் சார்பில், நீட் தேர்வை ரத்து செய்யக்கோரி கண்டன ஆர்ப்பாட்டம் இன்று நடைபெற்றது. இதற்கு அனைத்திந்திய மாணவர் பெருமன்றத்தின வடசென்னை மாவட்ட தலைவர் ராமசாமி தலைமை வகித்தார்.

மாநில தலைவர் இப்ராஹிம் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்துகொண்டு கண்டனங்களை பதிவு செய்தனர். அப்போது அவர்கள், ‘’நீட் தேர்வை உடனடியாக மத்திய அரசு ரத்து செய்ய வேண்டும்’’ என கோஷங்களை முழங்கினர். கண்டன ஆர்ப்பாட்டத்தில் இந்திய மாணவர் சங்கத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

 

Related posts

பிரான்ஸ் நாடாளுமன்றத் தேர்தலுக்கான இரண்டாம் சுற்று வாக்குப்பதிவு புதுச்சேரியில் தொடங்கியது

ராமேஸ்வர மீனவர்களை இலங்கை கடற்படை விரட்டியடிப்பு

காஷ்மீரின் குல்காம் மாவட்டத்தில் 4 தீவிரவாதிகள் என்கவுண்டர்