திருவனந்தபுரம்: ஓணம் பண்டிகை சிறப்பு பூஜைக்காக நாளை சபரிமலை நடை திறக்கப்படும் என தேவஸ்வம் போர்டு அறிவித்துள்ளது. சபரிமலை ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டு திருவோண நட்சத்திர பூஜை உள்ளிட்டவை நடக்கிறது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு பக்தர்கள் அனைவருக்கும் செப் 15, 16இல் சிறப்பு விருந்து வழங்கப்படவுள்ளது. சிறப்பு பூஜையில் கலந்து கொள்ள sabarimala.org.in. மூலம் முன்பதிவு செய்யலாம் என தேவஸ்வம் போர்டு தெரிவித்துள்ளது.