அதன் பின்னர், மாவட்ட தலைவர் ஸ்ரீராம் பேசுகையில், ‘ ஜனசேனா கட்சித் தலைவர் பவன் கல்யாண் ஆலோசனையின்படி சித்தூர் மாநகரத்தில் இலவசமாக மருத்துவ முகாம் நடத்தப்பட்டது. இந்த முகாமில் கண், காது, இதயம், சர்க்கரை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட நோய்களுக்கு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அதில் குறைபாடுள்ளவர்களுக்கு மருந்து, மாத்திரைகள் இலவசமாக வழங்கப்பட்டது. மேலும் கண் பரிசோதனை மேற்கொண்டவர்களுக்கு இலவச கண் கண்ணாடிகள் வழங்கப்பட்டது.
இதேபோல் சித்தூர் மாநகரத்தில் அனைத்து வார்டுகளிலும் ஜனசேனா கட்சி சார்பில் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும். ஆகவே பொதுமக்கள் அந்தந்த வார்டுகளில் நடைபெறும் மருத்துவ முகாமில் கலந்து கொண்டு பரிசோதனை செய்து பயன்பெற வேண்டும்‘ என பேசினார்.
இதில், கட்சி நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.