சென்னை: மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கை: கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த 18 மீனவர்கள், ஓமனில் உள்ள இயந்திர படகுகளில் மீன்பிடி தொழில் செய்துள்ளனர். அவர்களுக்கு சம்பளம் வழங்காமல் சட்டவிரோதமாக அடைத்து வைக்கப்பட்டு ள்ளனர். இவர்களை மீட்டு இந்தியாவிற்குக் கொண்டுவர ஒன்றிய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.