Sunday, June 30, 2024
Home » ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று பலாத்காரம்: வடமாநில வாலிபர்கள் இருவர் கைது

ஆடு மேய்த்து கொண்டிருந்த மூதாட்டியை குண்டுக்கட்டாக தூக்கிச்சென்று பலாத்காரம்: வடமாநில வாலிபர்கள் இருவர் கைது

by Suresh

காஞ்சிபுரம்: ஆடு மேய்த்துக்கொண்டிருந்த மூதாட்டியை வலுக்கட்டாயமாக தூக்கிச் சென்று பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். இதுதொடர்பாக, வடமாநில வாலிபர்கள் இருவர் கைது ெசய்யப்பட்டனர். கும்மிடிப்பூண்டி ஒன்றியம், குருராஜா கண்டிகை ஊராட்சி பில்லா குப்பம் எஸ்டி காலனியை சேர்ந்தவர் நாகரத்தினம்மாள் (58). இவரது கணவர் எல்லையா (61). இருவரும் இரண்டு மகன்களுடன் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனர். இந்நிலையில், நாகரத்தினம்மாள் மற்றும் கணவர் எல்லையா ஆகியோர் ஏராளமான ஆடு, மாடுகளை வளர்த்து வருகின்றனர். நேற்று முன்தினம் பில்லா குப்பம் அருகே கங்கை அம்மன் கோயில் பின்புறம் தம்பதியினர் இருவரும் ஆடு மற்றும் மாடுகளை மேய்ச்சலுக்கு விட்டிருந்தனர். மாலை 3 மணி அளவில் எல்லையா வழக்கம் போல் கங்கை அம்மன் கோயிலில் விளக்கு ஏற்றுவதற்காக சென்று விட்டார்.

இதை நோட்டமிட்டுக் கொண்டிருந்த வட மாநிலத்தை சேர்ந்த மூன்று வாலிபர்கள் தனியாக ஆடு மேய்த்துக் கொண்டிருந்த நாகரத்தினம்மாளை குண்டுக்கட்டாக தூக்கி சென்று, தைலமர தோப்பில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர். அவரின் அலறல் சத்தம் கேட்டு, அதன் அருகாமையில் உள்ள மைதானத்தில், கைப்பந்து விளையாடிக் கொண்டிருந்த வாலிபர்கள் காப்பாற்றும் நோக்கத்துடன் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அதற்குள் அந்த மூன்று வடமாநில வாலிபர்களும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

இந்நிலையில், மயக்க நிலையில் கிடந்த நாகரத்தினம்மாளை அங்கிருந்தவர்கள் மீட்டு கும்மிடிப்பூண்டி கோட்டக்கரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அப்போது, மூதாட்டியை பலாத்காரம் செய்த வடமாநில வாலிபர்கள் இருவரை ஊர்மக்கள் மடக்கி பிடித்து சரமாரியாக அடித்து உதைத்து, சிப்காட் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில், இரு வடமாநில வாலிபர்களும் மூதாட்டியை பலாத்காரம் செய்ததை ஒப்புக் கொண்டனர்.

இருப்பினும் இதுகுறித்து சிப்காட் காவல் நிலைய போலீசார் சி.எஸ்.ஆர் கூட பதிவு செய்யாததை கண்டித்து அப்பகுதி மக்களும், கம்யூனிஸ்ட் கட்சியினரும் நேற்று முன்தினம் இரவு கும்மிடிப்பூண்டி அரசு மருத்துவமனை நுழைவாயிலை முற்றுகையிட்டனர். அங்கு போலீசாருடன் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இதை தொடர்ந்து, நாகரத்தினம்மாள் 108 ஆம்புலன்ஸ் மூலம் சென்னை ஆர்எஸ்ஆர்எம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். தொடர்ந்து, இதுகுறித்து வழக்கு பதிவு செய்த சிப்காட் போலீசார் தலைமறைவாக உள்ள மேலும் ஒரு வாலிபரை தேடி வருகின்றனர்.

You may also like

Leave a Comment

seven − 4 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi