அவர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டிருந்த மர்ம நபர்கள், நேற்று முன்தினம் இரவு காசம்மாள் வீட்டிற்குள் புகுந்து கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, 65 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நேற்று காலை தங்கராஜ், மனைவியின் செல்போனிற்கு அழைத்தும் எடுக்காததால் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து பார்த்தபோது காசம்மாள் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.