மூதாட்டியை கழுத்தறுத்து கொன்று 65 பவுன் கொள்ளை

திருமங்கலம்: மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே பெரிய வாகைகுளம் மாயேன் நகரை சேர்ந்தவர் தங்கராஜ் (75). மனைவி காசம்மாள் (70). கடந்த 3 தினங்களுக்கு முன்பு தங்கராஜ் விபத்தில் சிக்கி புதுக்கோட்டையில் உள்ள மகள் வீட்டில் இருக்கிறார். இதனால் பெரிய வாகைகுளம் வீட்டில் காசம்மாள் மட்டும் தனியாக வசித்து வந்தார்.

அவர் வீட்டில் தனியாக இருப்பதை நோட்டமிட்டிருந்த மர்ம நபர்கள், நேற்று முன்தினம் இரவு காசம்மாள் வீட்டிற்குள் புகுந்து கத்தியால் அவரது கழுத்தை அறுத்து கொலை செய்துவிட்டு, 65 பவுன் நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். நேற்று காலை தங்கராஜ், மனைவியின் செல்போனிற்கு அழைத்தும் எடுக்காததால் உறவினர்களிடம் தெரிவித்துள்ளார். அவர்கள் வந்து பார்த்தபோது காசம்மாள் கொலை செய்யப்பட்டது தெரிய வந்தது.

Related posts

நான்முதல்வன் திட்டத்துடன் இணைந்து, நடத்தப்பட்ட பொது நுழைவுத்தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களின் முழுமையான தரவரிசைப்பட்டியல் நாளை வெளியாகிறது

சாம்சங் விவகாரம்: அமைச்சர்கள் குழு நடத்திய பேச்சுவார்த்தையில் சுமுக உடன்பாடு

திமுக ஆட்சியில் தள்ளுபடி மானியத் திட்டத்துக்காக ரூ.1,010.11 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது: எடப்பாடி பழனிசாமிக்கு அமைச்சர் காந்தி பதிலடி