மூதாட்டிகளிடம் நகைகள் பறித்த அணுமின் நிலைய ஊழியர் கைது

திருக்கழுக்குன்றம்: பெண்கள், மூதாட்டிகளை நோட்டமிட்டு, நகை பறிப்பில் ஈடுபட்ட அணுமின் நிலைய ஊழியரை போலீசார் கைது செய்தனர். பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் மஞ்சித்குமார் (31). இவர், கல்பாக்கம் அணுமின் நிலையத்தில் ஊழியராக பணிபுரிந்து வருகிறார். இந்நிலையில், சதுரங்கப்பட்டினம் போலீசார், அங்குள்ள ரவுண்டானா பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது போலீசார், அவ்வழியே வந்த மஞ்சித்குமாரை மடக்கி பிடித்து விசாரித்தபோது, அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்ததால், சந்தேகமடைந்து அவரை காவல் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அதில், கல்பாக்கம் பகுதிகளில் வீட்டில் தனியாக இருக்கும் மூதாட்டிகள், பெண்களை நோட்டமிட்டு, அவர்களிடம் நகைகள் கொள்ளையடிப்பதும், கடந்த 5 மாதங்களுக்கு முன்பு நசரங்குப்பத்தை சேர்ந்த பாப்பம்மாள், ஜமுனாரணி ஆகியோரிடம் அடுத்தடுத்து 12 சவரன் தாலி செயின்களை பறித்ததும் தெரியவந்தது. அவனிடமிருந்து நகைகளை பறிமுதல் செய்து, கைதான மஞ்சித்குமார் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி செங்கல்பட்டு சிறையில் அடைத்தனர்.

Related posts

சென்னை மாநகரில் மீதம் உள்ள 40% மழைநீர் வடிகால் பணிகள் ஆகஸ்ட் இறுதிக்குள் நிறைவு பெறும்: ஷிவ்தாஸ் மீனா

சென்னையில் 22 கேரட் ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ.54,440க்கு விற்பனை!!

கள்ளக்குறிச்சி, உளுந்தூர்பேட்டை, வானபுரம் உள்ளிட்ட 11 வட்டாட்சியர்களை இடமாற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் அதிரடி உத்தரவு