கன்னிவாடி அருகே வனப்பகுதியில் மூதாட்டி கொலை?.. அழுகிய நிலையில் எலும்புக் கூடாக சடலம் மீட்பு

நிலக்கோட்டை: கன்னிவாடி அருகே, மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியில் அழுகிய நிலையில் எலும்புக் கூடாக மூதாட்டியின் சடலத்தை மீட்ட போலீசார் கொலையா… தற்கொலையா என விசாரித்து வருகின்றனர். திண்டுக்கல் மாவட்டம், கன்னிவாடி அருகே, மேற்குத்தொடர்ச்சி மலை வனப்பகுதியில், கன்னிமார்கோயில் அருகே, பெண் ஒருவர் இறந்த நிலையில் உடல் அழுகி எலும்புக் கூடாக கிடப்பதாக கன்னிவாடி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் வனப்பகுதிக்கு சென்று, எலும்புக் கூடாக கிடந்த பெண்ணின் சடலத்தை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக திண்டுக்கல் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், ‘இறந்து கிடந்தது கன்னிவாடி அருகே உள்ள தோனிமலையைச் சேர்ந்த ஆண்டியம்மாள் (60) என்பது தெரிய வந்தது. ஒரு மாதத்துக்கு முன்பு அவர் மாயமான புகாரின் பேரில், கன்னிவாடி போலீசார் வழக்குப்பதிந்து தேடி வந்ததுள்ளனர். இந்நிலையில், அவரது சடலம் மீட்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் வழக்குப்பதிந்து ஆண்டியம்மாள் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது யாரேனும் கொலை செய்துவிட்டு உடலை மலைப்பகுதியில் வீசினார்களா என விசாரித்து வருகின்றனர்.

Related posts

ஆதிதிராவிடர், பழங்குடியினர் நல ஆணைய தலைவராக முன்னாள் நீதிபதி தமிழ்வாணன் நியமனம்.! எஸ்சி, எஸ்டி பணியாளர் சங்கம் வரவேற்பு

மோடியின் இயக்கத்தில் நடிக்கிறார் பவன் கல்யாண்: ஷர்மிளா குற்றச்சாட்டு

முதியோர் இல்லங்களுக்கு பதிவு உரிமை சான்று கட்டாயம்