மாடியிலிருந்து விழுந்த முதியவர் உயிரிழப்பு

கூடுவாஞ்சேரி: கூடுவாஞ்சேரி அடுத்த காரணை புதுச்சேரி ஊராட்சிக்கு உட்பட்ட அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்தவர் கணேசன் (69). இவருக்கு மனைவி மனோர்மணி (55), மகன் மதன்குமார், மகள் பிரியா ஆகியோர் உள்ளனர். இந்நிலையில் கடந்த 14ம் தேதி இரவு கணேசன் மது அருந்திவிட்டு வீட்டுக்கு சென்றார். பின்னர், சாப்பிட்டு தனது வீட்டின் மொட்டை மாடியில் படுத்து தூங்கினார்.

அப்போது, போதையில் மொட்டை மாடியிலிருந்து கணேசன் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. இதில், பலத்த படுகாயமடைந்த கணேசனை மீட்டு, செங்கல்பட்டு அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு, சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு கணேசன் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து புகாரின்பேரில் கூடுவாஞ்சேரி போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

இஸ்லாமியர்கள் பற்றி அவதூறாக பதிவிட்ட பாஜக பிரமுகருக்கு நிபந்தனை முன்ஜாமீன்

முண்டந்துறை வனப்பகுதியில் சாலை அமைக்காதது ஏன்? : ஐகோர்ட்

இளைஞர்களை தாக்கிய வழக்கில் பாடகர் மனோவின் மகன்கள் 2 பேருக்கு நிபந்தனை முன்ஜாமின்!