அப்போது, ஆனந்தன் என்பவர் தனது நிலத்தில் எலிக்காக வைக்கப்பட்ட மின் வெளியில் அன்னம்மாள் சிக்கியதாக கூறப்படுகிறது. இதில், மின்சாரம் தாக்கி அன்னம்மாள் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து, சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற உத்திரமேரூர் போலீசார், அன்னம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, சட்ட விரோதமாக மின்வேலி அமைத்த ஆனந்தனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.