சென்னை: பழைய சட்டங்களை காப்பி அடித்துதான் 3 புதிய குற்றவியல் சட்டங்களை கொண்டு வந்துள்ளார்கள் என முன்னாள் ஒன்றிய அமைச்சர் ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். புதிய குற்றவியல் சட்டங்களுக்கு எதிரான திமுக வழக்கறிஞரணியின் உண்ணாவிரத போராட்டத்தில் ப.சிதம்பரம் பேசினார். நாடாளுமன்றத்தில் விவாதமின்றி எதேச்சதிகார போக்கில் 3 குற்றவியல் சட்டங்களை நிறைவேற்றியது கண்டனத்துக்குரியது என்று தெரிவித்தார்.