மூதாட்டியிடம் கவரிங் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது

உடுமலை, ஏப்.17: உடுமலை கணக்கம்பாளையம் தாண்டா கவுண்டன் தோட்டத்தை சேர்ந்த பொன்னுசாமி மனைவி பாண்டியம்மாள் (65). இவர் இரு தினங்களுக்கு முன் வெளியில் நடந்து சென்றபோது, 2 பேர் அவர் அணிந்திருந்த கவரிங் செயினை பறித்து சென்றனர். இது பற்றிய புகாரின்பேரில் குடிமங்கலம் போலீசார் வழக்குப்பதிந்து, கோட்டூரை சேர்ந்த சூர்யா (28), கார்த்தி (24) ஆகியோரை கைது செய்தனர்.

Related posts

சிவகாசி கண்மாய் கரையில் நடைமேடை பணிகள் தீவிரம்

நாட்டாண்மையை தாக்க முயற்சி: நள்ளிரவில் கிராமத்தினர் சாலை மறியல்

நாளைய மின்தடை