பழைய சோறு…புதிய செய்தி!

பழைய சோறு பச்ச மிளகா…

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ட்ரெண்டிங் ஆன ஒரு இனிய பாடல் இது. இந்தப் பாடலைப் போலவே இந்த காம்போவும் அனைவருக்கும் மிகப்பிடிக்கும். இப்போது இருக்கும் 2கே கிட்ஸ்க்கு தெரியுமோ, தெரியாதோ? அதற்கு முன்பு பிறந்த 90 கிட்ஸ், 80 கிட்ஸ், 70 கிட்ஸ் என எல்லா கிட்ஸ்க்கும் பழைய சோறு பச்சை மிளகா காம்போ இல்லாமல் அன்றைய நாள் தொடங்கி இருக்காது. ஆனால் கால ஓட்டத்தில் பழைய சோறு இப்போது காலாவதியாகும் ஃபுட் லிஸ்ட்டில் சேர்ந்து வருகிறது. என்ன இருந்தாலும் பழைய சோற்றின் மகிமை அறிந்த பலர் அதை இன்னும் தங்களது மார்னிங் பிரேக் பாஸ்ட்டாகவே தொடர்ந்து வருகிறார்கள். சாதாரண ஓட்டல் துவங்கி ஸ்டார் ஓட்டல் வரை பழைய சோற்றை இப்போது விற்கத் துவங்கி இருக்கிறார்கள்.

இந்த நிலையில் தமிழகத்தின் முக்கியத்துவம் வாய்ந்த அரசு மருத்துவமனையான ஸ்டான்லி மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பழைய சோற்றை பரிந்துரைத்து வருகிறார்கள். அதுவும் குடல் நோய்களால் அவதிப்படும் நோயாளிகளுக்கு பழைய சோற்றை வழங்கி, நல்ல ரிசல்ட்டையும் பெற்று வருகிறார்கள். பழைய சோறு சாப்பிடும் குடல் பாதிப்பு கொண்ட நோயாளிகளுக்கு, அந்தப் பிரச்சினை சரியாகி வருவதாகவும் மகிழ்ச்சியான செய்தியைப் பகிர்ந்து வருகிறார்கள். ஸ்டான்லி மருத்துவமனையின் இரைப்பை குடல் அறுவை சிகிச்சை தலைவர் ஜஸ்வந்த் கூறும் இதுகுறித்த தகவல், பழைய கஞ்சி சாப்பிடுபவர்களுக்கு ஒரு எக்ஸ்ட்ரா தெம்பு தருவதாக இருக்கிறது.“ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட நோயாளிகளுக்கு குடலில் உள்ள அலர்ஜி, புண்கள் காரணமாக குடல் புண்ணாகி, அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய நிலை இருந்தது.

ஆனால் பழைய சோற்றைக் கொடுத்து அறுவை சிகிச்சையே இல்லாமல் அவர்களைக் காப்பாற்றி வருகிறோம். இதற்காக தமிழக அரசு சார்பில் ரூ.2.77 கோடி நிதியுதவி பெறப்பட்டு ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு அவர்களின் உணவுப் பழக்கத்தால்தான் குடல் நோய் வந்தது தெரியவந்தது. இதனால் சிறிய மண் பானையில் பழைய சோற்றை வழங்கினோம். அவர்கள் தற்போது உடல்நலம் பெற்றிருக்கிறார்கள். பழைய சோற்றில் நன்மை செய்யும் பாக்டீரியாக்கள் எத்தனை சதவீதம் இருக்கின்றன என்பதைத் துல்லியமாக அறிந்துகொள்வதற்கான ஆராய்ச்சிகள் தற்போது நடந்து வருகின்றன. இந்தக் கஞ்சியை நீரிழிவு நோயாளிகள் சாப்பிட்டால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். பழைய மண் சட்டியில் வைத்து சாப்பிட்டால் அது எளிதில் ஜீரணமாகும். 80 சதவீத குடல் நோய்களுக்கு அருமருந்தாக பழைய சோறு விளங்குகிறது’’ என்கிறார் டாக்டர் ஜஸ்வந்த்.

– அ.உ.வீரமணி

Related posts

அமெரிக்க பயணம் முடித்து சென்னை திரும்பினார் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு: 19 நிறுவனங்களுடன் ரூ.7,616 கோடி ஒப்பந்தம்; 11,516 பேருக்கு வேலை; தமிழக மக்களுக்கான சாதனை பயணமாக அமைந்தது என பெருமிதம்

புதிய அத்தியாயம்

79 பேர் இடமாற்ற விவகாரம் டான்ஜெட்கோ உத்தரவை எதிர்த்த தொழிற்சங்க வழக்கு தள்ளுபடி: உயர்நீதிமன்றம் உத்தரவு