சென்னை : தமிழ்நாடு அரசு சமர்ப்பித்த ஒகேனக்கல் 2ம் கட்ட கூட்டு குடிநீர் திட்ட அறிக்கைக்கு வெளிநாட்டில் இருந்து கடன் பெற ஒன்றிய அரசின் நிபுணர் குழு ஒப்புதல் அளித்துள்ளது.ஒகேனக்கல் 2ம் கட்ட கூட்டுக் குடிநீர் திட்டத்தால் 45 லட்சம் பேர் பயன்பெறுவர்.தொழில் நகரான ஓசூர் மாநகராட்சி தருமபுரி, கிருஷ்ணகிரி நகராட்சி மக்களுக்கு இத்திட்டத்தால் காவிரி நீர் கிடைக்கும்.