பென்னாகரம்: ஒகேனக்கல் காவிரியில் கடந்த சில நாட்களாக நீர்வரத்து 2 ஆயிரம் கனஅடியாக இருந்த நிலையில், நேற்று மதியம் விநாடிக்கு 10,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று முன்தினம் 163 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை விநாடிக்கு 2,528 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து விநாடிக்கு 500 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. திறக்கப்படும் நீரின் அளவை விட, தண்ணீர் வரத்து அதிகமாக இருப்பதால் அணையின் நீர்மட்டம் சரிவில் இருந்து மெல்ல உயரத் தொடங்கியுள்ளது. நேற்று முன்தினம் 30.90 அடியாக இருந்த நீர்மட்டம் நேற்று 31.31 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 8.05 டிஎம்சியாக உள்ளது.