இதன் காரணமாக நேற்று முதல் பரிசல் இயக்கவும், அருவிகளில் குளிக்கவும் மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதேபோல், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து நேற்று 19,199 கனஅடியாக அதிகரித்தது. பாசனத்திற்கு 14,200 கனஅடி வீதம் திறக்கப்படுகிறது. வரத்து அதிகரித்துள்ளதால் அணையின் நீர்மட்டம் 115.56 அடியிலிருந்து 115.82 அடியாக உயர்ந்துள்ளது. நீர் இருப்பு 86.95 டிஎம்சியாக உள்ளது.