ஒகேனக்கலுக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர்: காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்யும் மழை காரணமாக ஒகேனக்கல் காவிரியில், நேற்று காலை விநாடிக்கு 18,000 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அங்குள்ள ஐவர்பாணி, மெயினருவி, சினிபால்ஸ், ஐந்தருவிகளில் தண்ணீர் கொட்டுகிறது. இதனால்அருவிகளில் குளிக்க மாவட்ட நிர்வாகம் தடை விதித்துள்ளது. இதே போல், மேட்டூர் அணைக்கு நேற்று காலை நிலவரப்படி 14,629 கனஅடியாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 111.19 அடியாகவும், நீர் இருப்பு 80.11 டிஎம்சியாகவும் உள்ளது.

Related posts

மணல்மேடு முட்டம் பாலத்துக்கு இணைப்பு சாலை அமைப்பது எப்போது?.. வாகன ஓட்டிகள் எதிர்பார்ப்பு

கருங்கல் அருகே இன்று கன்டெய்னர் லாரி சிறை பிடிப்பு: பொதுமக்கள் சாலை மறியலால் பரபரப்பு

ரவுடி சீசிங் ராஜா குறித்து தகவல் தெரிந்தால் தெரிவிக்கலாம்: தாம்பரம் போலீசார்