சேலம்: காவிரி ஆற்றில் நீர்வரத்து வினாடிக்கு 1.82 லட்சம் கன அடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1.70 லட்சம் கனஅடியாக இருந்த நீர்வரத்து 1.82 லட்சம் கன அடியாக உயர்ந்துள்ளது. ஒகேனக்கல் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் பரிசல் இயக்கவும், சுற்றுலாப்பயணிகள் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.