சென்னை: எண்ணூர் முகத்துவாரம் பகுதியில் 5வது நாளாக எண்ணெய் கழிவுகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 17ம் தேதிக்குள் கொசஸ்தலை ஆற்றில் படிந்துள்ள எண்ணெய் கழிவுகளை அகற்ற வேண்டும் என தென் மண்டல பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ள நிலையில், 100க்கும் மேற்பட்ட படகுகளில் 450க்கும் அதிகமானோர் எண்ணெய் அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.