அதிகாரி மிரட்டியதால் அஞ்சலக பெண் ஊழியர் தற்கொலை

மதுரை: மதுரை மாவட்டம், டி.கல்லுப்பட்டி, எம்.ஆர் நகரைச் சேர்ந்தவர் விக்னேஷ்குமார்(34). இவரது மனைவி சுமதி (30). இவர் திருப்பரங்குன்றத்தில் அஞ்சலகத்தில் ஊழியராகப் பணியாற்றி வந்தார். நேற்று முன்தினம் சுமதி பணியிலிருந்தபோது, அவரது உயரதிகாரி ஒருவர் வேலை சம்பந்தமாக அவரை குறை கூறியதுடன், மிரட்டி விளக்க கடிதம் எழுதி வாங்கியதாக கூறப்படுகிறது. இதனால் கடும் மன உளைச்சலுடன் வீட்டிற்கு வந்த சுமதி, நேற்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

ஜில்லுனு ஜூஸ் குடிச்சு உடம்ப ஜில் பண்ணுங்க… மண்டையை பிளக்கும் வெயிலை சமாளிக்க வழி இருக்கு…

பண்டிகைக் காலங்களில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க போக்குவரத்துக்கழகம் புதிய திட்டம்

உத்தரகாண்ட் நிலச்சரிவில் சிக்கிய தமிழர்கள் ஊர் திரும்பினர்: மீட்க உதவிய ராணுவம், தமிழ்நாடு அரசுக்கு நன்றி